ஜூன் 23, 2011

ourjaffna.com



யாழ்ப்பாணத்து பண்பாட்டுப் பாரம்பரியங்களை மற்றும் படைப்பாளிகள் விபரத்தை எந்த ஆரவாரமுமில்லாமல் வலையேற்றி வரும் பயனுள்ள தளம் ourjaffna.com இதை அடிக்கடி நானும் பார்த்து வருகிறேன். எனது வலைப்பதிவில் இதற்கு ஏற்கனவே ஒரு இணைப்பும் கொடுத்திருந்தேன்.

அதில் இவ்வாரம் என்னைப் பற்றிய தகவல்களையும் (விக்கிபீடியாவில் இருந்து), எனது 'சபிக்கப்பட்ட உலகு' கவிதையையும் எடுத்தாண்டு தமது பக்கத்தில் இணைத்திருந்திருக்கிறார்கள்.

மிக்க நன்றி என்ற ஒரு வார்த்தையை அந்தத் தளத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு கூறிக்கொள்கிறேன். மேலதிகமாக வாசிக்க

ஜூன் 12, 2011

இனிய ஒரு பொழுது





என் டயறிக்குறிப்பிலிருந்து...
12.06.2011 அன்று நல்லூரில் நடைபெற்ற இலங்கை இலக்கியப்பேரவை விருது வழங்கும் நிகழ்வில் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருது வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதை நூல்களுள் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியாவுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துவாரகனுக்கும் (எனக்கும்)இவ்விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. (நூல்களைத் தெரிவுசெய்தவர் நாடறிந்த கவிஞர் சோ.பத்மநாதன் என நிகழ்வின் உரையில் ஐ. வரதராஜன் தெரிவித்தார்)


(பெண்ணியாவுக்கு இலங்கை இலக்கியப் பேரவை வழங்கிய
இன்னொரு பரிசுச்சான்றிதழும் 2008 கிடைத்தது)


நிகழ்வில் வாழ்த்துரையை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தினார்.கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த உரையை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் நிகழ்த்தி (உரையை பதிவு செய்து வைத்துள்ளேன். பின்னொரு சந்தர்ப்பத்தில் தருவேன்.) சான்றிதழையும் பணமுடிச்சையும் (கவிஞர்கள் இருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா) வழங்கிக் கெளரவித் தார். இரண்டு கவிகள் பற்றிய அறிமுக உரையை ஐயாத்துரை வரதராஜன் நிகழ்த்தினார்.
அவ்விழாவில் சக கவிஞர் பெண்ணியாவுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்வில் இறுதியில் ஐயாத்துரை குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மிக்க மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்த நாளாக அன்றைய நாள் அமைந்திருந்தது.
-துவாரகன்
படத்தில் நண்பர் செல்மர் எமில், பெண்ணியா (தனது குழந்தையுடன்), யோகோஸ்வரி சிவப்பிரகாசம், வரதராஜன் ஆகியோருடன் எனது குடும்பம்


கவிஞர் ஐயாத்துரை குடும்ப உறவுகளுடன்

படங்கள் - வ.வித்தியும் நண்பர்களும்