அக்டோபர் 02, 2021

இலக்கியம் தந்த நட்பு

 

அண்மையில் குமிழி நாவலை எழுதி  வெளியிட்ட சுவிஸ் ரவி அவர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல்  கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன. தற்போதைய கொவிட் சூழலில்  கற்றலுக்கு மிக அவசியமான பாட அலகுகளைத் தெரிவு செய்து தொண்டைமானாறு  வீரகத்திப்பிள்ளை  மகாவித்தியாலய  ஆசிரிய நண்பர்களின் உதவியுடன் தரம் 5, க.பொ.த சாதாரணதரம் மற்றும்  உயர்தரப்பிரிவு மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள் (வித்தியாலய பாட ஆசிரியர்கள் தயாரித்தவை, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைத் திணைக்களத்தின் புள்ளித்திட்டம், துறைசார்ந்தவர்களின் குறிப்புகள் ஆகியவை ) வழங்கப்பட்டன.

தரம் 5ற்குரியது, தமிழ் (O/L), ஆங்கிலம், விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம், தமிழ் (A/L), அளவையியல் , நாடகமும்அரங்கியலும் முதலான கையேடுகள் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றில் க.பொ. த சாதாரணதரம், மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான தமிழ்ப்பாடத்திற்கான ஒரு தொகுதி கையேடுகள் சிதம்பரக் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.

ரவி அவர்கள் குமிழி நாவல் விற்பனை மூலம் பெறப்பட்ட இருபத்தையாயிரம்  ரூபாவை அனுப்பி வைத்து இந்தப் பணத்தை உங்கள் மாணவர்களுக்குப் பயன்படுத்துங்கள் என்று கூறியிருந்தபோது என்ன செய்யலாம் என ஆசிரிய நண்பர் ரூபரஞ்சனுடன் ஆலோசித்து இறுதியில் இந்த முயற்சியை மேற்கொண்டோம். கொவிட் பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 3 கட்டங்களாகப் பிரதிசெய்து தந்த சர்மிலன் பிறிண்டேர்ஸ்  இன்பனுக்கும் கையேடுகளைத் தெரிவுசெய்து தந்த ஆசிரியர்களுக்கும் நண்பர் ரவி அவர்களுக்கும் மேலான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-சு.குணேஸ்வரன் 
முன்னைய செய்தி ஒன்றும் இங்கே உள்ளது. 

மேலும் சில படங்கள்