காரைக்கவி கந்தையா பத்மானந்தனின் 'சீத்துவக்கேடு - துலைஞ்சுபோன எங்கட வாழ்க்கை' என்ற ஆவணநூல் தொடர்பில் நானும் கணபதி சர்வானந்தா அவர்களும் பைந்தமிழ்ச்சாரலுக்கு நிகழ்த்திய உரை.
மே 03, 2026
"ஒருபோதும் நான் என் தந்தையின் மகள் இல்லை" நூல் வெளியீடு
பாமினி செல்லத்துரை எழுதிய "Never My Father's Daughter" என்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பாகிய "ஒருபோதும் நான் என் தந்தையின் மகள் இல்லை" என்ற நாவல் வெளியீடு 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை யா/ சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா, சிறப்பு விருந்தினராக வல்வை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பாமினி செல்லத்துரையின் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்த கலாநிதி சபா. இராஜேந்திரன் வரவேற்புரையினையும் நூலுக்கான மதிப்பீட்டுரையினை கலாநிதி சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர்.
'தமிழ் இளைஞர்களின் பலமும் பலவீனமும்' என்ற தலைப்பில் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் பாமினி செல்லத்துரையும் நன்றியுரையை சி. ராஜ்குமாரும் நிகழ்த்தினர். பாடசாலைச் சமூகத்தினரும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பாக்கினர்.
நன்றி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



