ஏப்ரல் 28, 2012

கா. சூரன்

தமிழ் விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு வரிசையில்....சைவப்பெரியார் கா. சூரன்

 http://tawp.in/r/35n3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைவப்பெரியார் கா. சூரன் (ஆகத்து 1, 1881 - 1956) இலங்கையின் வடக்கே வடமராட்சியில் அமைந்துள்ள தேவரையாளி சைவ வித்தியாசாலையின் நிறுவனராகவும் முதல்வராகவும் இருந்தவர். இவர் ஒரு சமூக முன்னோடியுமாவார். பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவர். முற்போக்கு எண்ணம் கொண்டவர்.

பொருளடக்கம் [மறை]
1 வாழ்க்கைச் சுருக்கம்
2 சமூகப்பணிகள்
3 தொடர்பான பதிவுகள்
3.1 சைவப்புலவர் சூரன் எழுதியவை
3.2 ஏனையவர்கள் எழுதியவை
4 நினைவுச்சின்னம்
5 மேற்கோள்கள்
6 வெளியிணைப்புக்கள்
[தொகு]வாழ்க்கைச் சுருக்கம்

1881 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கரவெட்டியில் பிறந்தார். தந்தையார் வே. காத்தார், தாயார் வள்ளி ஆகியோருக்கு மூத்த புதல்வனாகப் பிறந்தார். கரவெட்டியில் இருந்த உவெசுலியன் மிசன் கிறித்தவப் பாடசாலையில் 5 ஆம் வகுப்புவரை கல்வி கற்றார். 1917 இல் வதிரியில் மாணிக்கம் என்பவரை மணஞ் செய்தார். பிள்ளைகள் மகள் சிவபாக்கியம், மகன் ஏகாம்பரம்.

[தொகு]சமூகப்பணிகள்

தேவரையாளி சைவவித்தியாசாலையின் நிறுவனர். தேவரையாளி ஆரம்பப் பாடசாலையை வதிரி ‘வண்ணஞ்சீமா’ என்ற காணியில் சிறு கொட்டிலில் தொடக்கி பின்னர் 1917 இல் தற்போது அமைந்திருக்கும் இடத்தில் பிரவேசம் செய்வித்தார். 1919 இல் பாடசாலை பதிவு செய்யப்பட்டது.
1923 ஆம் ஆண்டில் வதிரியில் அண்ணமார் கோவிலில் நடைபெற்ற ஆடு பலியிடுதலை சைவப்பெரியார் சூரன் பலிபீடத்தில் தன் தலையை வைத்து ஆட்டை வெட்டுவதற்க்கு முன்னர் தன் தலையை வெட்டுங்கள் எனக் குரல் கொடுத்து அந்த ஊரில் பலியிடுதலை நிறுத்திவைத்தார்[1]. அதன் பின்னர் அந்த அண்ணமார் கோவில் பிள்ளையார் கோவிலாக மாறியது. இந்த நிகழ்வுகள் பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி பல இடங்களில் எழுதியிருக்கிறார்.
[தொகு]தொடர்பான பதிவுகள்

[தொகு]சைவப்புலவர் சூரன் எழுதியவை
பராசக்தி படவிமர்சனம் – சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரமானது. இது எட்டுப்பக்கங்களைக் கொண்ட சிறிய பிரசுரமாகவும் 1953 இல் 15 சத விலையில் வெளிவந்தது. பராசக்தி படவிமர்சனம் என்ற பெயரில் அமரர் வல்லிபுரம் கந்தசாமி நினைவு வெளியீடாக 10.03.2004 இல் மீளவும் வெளியிடப்பட்டது.
மகாத்மா காந்தி மறைந்தபோது அவர் மீது பல இரங்கற்பாடல்களை எழுதியவர்.
சூரன் சுயசரிதை (பதிப்பாசிரியர்: ராஜ சிறீகாந்தன், 2004, பக்கம் 148.
[தொகு]ஏனையவர்கள் எழுதியவை
சூரனின் நினைவுதினத்தில் வெளியிடப்பட்ட ‘கல்வெட்டு’
கல்கி "இலங்கையில் ஒரு வாரம்" என்ற கட்டுரையின் 8 ஆம் அத்தியாயத்தில் சைவப்பெரியார் சூரன் பற்றியும் அப்போது இலங்கையில் நிலவிய தீண்டாமை பற்றியும் 08.09.1950 இல் வெளிவந்த கல்கி இதழில் எழுதியுள்ளார்.
[தொகு]நினைவுச்சின்னம்

சைவப்பெரியார் சூரன் சிலை தேவரையாளி இந்துக்கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வுருவச் சிலைக்கு 06.02.2004 இல் அப்போதைய அதிபர், மா. குட்டித்தம்பி அடிக்கல் நாட்டினார். வடமராட்சி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்த வி. அருளானந்தம் 14.06.2004 இல் சூரன்சிலையை திறந்து வைத்தார்.
[தொகு]மேற்கோள்கள்

↑ வதிரி பூவற்கரையான்
[தொகு]வெளியிணைப்புக்கள்

நூலகம் திட்டத்தில் சூரன் சுயசரிதை
சூரன் எழுதிய பராசக்தி படவிமர்சனம்
பகுப்புகள்: 1881 பிறப்புகள்1956 இறப்புகள்இலங்கையின் சைவப்பெரியார்கள்

ஏப்ரல் 27, 2012

எனது நேர்காணல்

அம்ருதா ஏப்ரல் 2012 இதழில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. நண்பர்கள் இதழ் கிடைத்தால் பார்க்கலாம்.
 (நேர்காணலை பின்னர் எனது வலையில் இணைப்பேன்)



ஏப்ரல் 19, 2012

விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு வரிசையில் ஆனந்தமயில்




ஆனந்தமயில்http://tawp.in/r/354r

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. ஆனந்தமயில், ஒரு ஈழத்து எழுத்தாளர். (தோற்றம் : நவம்பர் 081947 மறைவு : மார்ச் 11,2012சிறுகதைகவிதைகுறுநாவல்,நாடகங்கள்மொழிபெயர்ப்புக்கள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தால் இவர் நடையை இழந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று காலமானார்.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]கல்வி

ஆரம்பக்கல்வியை யா/கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலத்திலும் இடைநிலைக் கல்வியை யா /நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் மற்றும் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். உயர் தரத்தை வல்வை சிதம்பராக் கல்லூரியில் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பயின்று 1947 இல் கலைமாணிப் பட்டம் பெற்றார்.

[தொகு]குடும்பம்

மனைவி நகுலேஸ்வரி, பிள்ளைகள் தீபவர்ணன், தாமரைவர்ணன், நிரூபவர்ணன்(மறைவு), நித்திலவர்ணன், ரூபவர்ணன், ஜீவவர்ணன், முல்லைத்திவ்யன், வர்ணாம்பாள்

[தொகு]தொழில்

எழுதுவினைஞராக பணிபுரிந்தார். கொழும்பு பரீட்சைத் திணைக்களத்திலும்; மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், நுவரெலியா, முல்லைத்தீவு ஆகிய கல்வித்திணைக்களங்களில் பணியாற்றினார். இறுதியாக பருத்தித்துறை வலயக் கல்வி அலுவலகத்திலும் கரவெட்டி கோட்டக்கல்வி அலுவலகத்திலும் பணியாற்றினார்.

[தொகு]எழுத்துப்பணி

சிறுகதை
ஒரு எழுதுவினைஞனின் டயறி என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் ஒற்றைக்கால்கோழி, முருகைக்கற்பூக்கள், காக்காச்சி கரிமகளே, திருவிழா, ஓர் எழுதுவினைஞனின் டயறி, வாழும் வெளி, ஒரு கட்டுமரம் காத்திருக்கிறது, கொலுமீட்பு, விதி, கலை வந்தபோது, விளக்கீடு ஆகிய 12 சிறுகதைகள் உள்ளன.
“சோகம் நிரம்பி யாத்திரை” என்ற சிவனெளிபாதமலை பயணம் பற்றி இவர் எழுதிய சிறுகதை அச்சுருப்பெறாத நிலையில் தொலைந்துவிட்டது.
கவிதை
‘வீச்சுவலைக்காரனும் மாதுளம் பிஞ்சுகளும்’ என்ற அச்சுருப்பெறாத கவிதைத்தொகுதியும், தொகுக்கப்படாத பல கவிதைகளும் உள்ளன. இவை இன்னமும் நூலுருப் பெறவில்லை.
குறுநாவல்
இவர் ‘அம்மாவரை அவன்’ என்ற குறுநாவலை எழுதியுள்ளார். இது 2012 இல் வெளிவந்த “நினைவிலிருந்து சொற்களுக்கு”என்ற தொகுப்பில் உள்ளது.
நாடகம்
இவர் எழுதிய ‘சீதனம்’ என்ற நாடகம் 1980-1981 காலப்பகுதியில் பொலிகை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தால் மேடையேற்றப்பட்டது. இவரது ‘வாக்குறுதி’, ‘எதற்குமோர் எல்லையுண்டு’ ஆகிய நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. செல்லச்சாமியின் ‘விடுதலைக்கோர் பார்வை’ என்ற நாடகத்தில் பெண் வேடமிட்டு நடித்தார்.

[தொகு]பெற்ற சிறப்புகள்

  • இவருடைய ஒரு எழுதுவினைஞனின் டயறி என்ற சிறுகதைத் தொகுதி 2008 இல் வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான விருது மற்றும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது ஆகியவைகளைப் பெற்றது.

[தொகு]வெளிவந்த நூல்கள்

  • ஒரு எழுதுவினைஞனின் டயறி (வர்ணா வெளியீடு - மார்ச் 2008)
  • நினைவிலிருந்து சொற்களுக்கு… (ஏப்ரல் 2012)

[தொகு]வெளியிணைப்பு

ஏப்ரல் 13, 2012

புனைவும் புதிதும்




எனது 'அலைவும் உலைவும்' கட்டுரைத்தொகுதிக்குப் பின்னர் இம்மாத இறுதியில் வெளிவரவிருக்கும் இரண்டாவது கட்டுரைத் தொகுதியான 'புனைவும் புதிதும்' நூலின் முன் அட்டை.

- சு. குணேஸ்வரன்

ஏப்ரல் 11, 2012

மறுமலர்ச்சிக் கவிதைகள்

விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு

மறுமலர்ச்சிக் கவிதைகள் 


மறுமலர்ச்சிக் கவிதைகள்http://tawp.in/r/34g3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
S.kuneswaran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:45, 6 ஏப்ரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு←முந்தைய தொகுப்பு | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
மறுமலர்ச்சிக் கவிதைகள் என்பது இலங்கையில் வெளியிடப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பு நூல் ஆகும். 1943 ஆம் ஆண்டில் ஈழத்தில் உருவான மறுமலர்ச்சி சங்கத்தின் ஊடாக மறுமலர்ச்சி என்ற இதழ் 1946 முதல் 1948 வரை வெளிவந்தது. அவ்விதழில் வெளிவந்த கவிதைகளே மறுமலர்ச்சிக் கவிதைகள் என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

[தொகு]நூல் விபரம்

  • மறுமலர்ச்சிக் கவிதைகள்,
  • தொகுப்பும் பதிப்பும் - செல்லத்துரை சுதர்சன்,
  • வெளியீட்டு ஆண்டு - டிசம்பர் 2006,
  • ISBN:955-544-1-2,
  • அச்சிட்டோர் - 'கிறிப்ஸ்' பிறின்டேஸ்

[தொகு]தொகுப்பில் உள்ள கவிதைகள்

  • நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் கவிதைகள்-கற்பகப் பழம், இலவுகாத்த கிளி
  • மஹாகவி து. உருத்திரமூர்த்தியின் கவிதைகள்-இரவு, காதலுள்ளம், அலையெடுத்த கடலென...
  • யாழ்ப்பாணன் (வே. சிவக்கொழுந்து)கவிதைகள் - சக்தியின் இருப்பிடம்,முதற்துயரம், பொல்லாப்பு செய்யாதே, தொழிலாளர் விதியிதுவோ?, இனி உலகில்...முதல்வன் யார்?, அன்பின் திறன், பாரதி
  • சோ. நடராஜன்கவிதைகள் - எங்கே காணலாம், மோட்டு விக்கிரகம், கழுதை.
  • நாவற்குழியூர் நடராஜன் கவிதைகள் - நாங்கள், பெரிதும் சிறிதும், சுழற்சி, கேட்டியோ பாரதீ!, சிறை, எனக்கு அது முடியாது, தெரியாதா?, பச்சை பச்சையாய், என் மனைவிக்கு, எம்முன் இருந்த தெய்வம்.
  • சாரதா (க. இ. சரவணமுத்து)கவிதைகள் - துயிலெழுச்சி, வாழ்க்கைச் சுவடு, எங்கள் நாவலன், அதுவும் ஒரு காலம், வேண்டாத புத்திமதி, வேண்டும் புத்திமதி,வேளைவரும், கனக்கவேன் கதைகள் ஐயா, நிதானமில்லை.
  • வரதர் (தி. ச. வரதராசன்)கவிதைகள் - மீசையை முறுக்கி விட்டு, அம்மான் மகள்.
  • கலைவாணன் கவிதை - உலாவிடுவேன்.
  • கதிரேசன் கவிதை - வேற்றுமை
  • வ. இ கவிதை - இலங்கை மாதாவுக்கு
  • சோ. தியாகராஜன் கவிதை - வாழ்வுத் திரையில்.
  • காவலூர்க் கைலாசன் கவிதை - புது யுகத்தில்.
  • கோட்டாறு எஸ். ஆதிமூலப்பெருமாள் ஆரியர் கவிதை - பக்தியால் ஆகுமோ?
  • பரமேஸ் கவிதை - குயிலின் பதில்
  • கவிஞன் கவிதை - பொங்கலோ பொங்கல்.
  • கோட்டாறு தே. ப பெருமாள் கவிதை - அருட்கடலே வாழ்க
  • கு. பெரியதம்பி கவிதை - ஈழத்தாய்
  • சுவாமி விபுலாநந்தர் கவிதை - பூஞ்சோலைக் காவலன்
  • தில்லைச்சிவன் கவிதை - பட்டணத்து மச்சினி
  • வித்துவான் க. வேந்தனார் கவிதை - ஆட்டை வெட்டும் கத்திக்கு உங்கள் ஆவி கொடுக்க வாருங்கள்.
  • நடனம் கவிதை - பட்டிக்காட்டான் பார்த்த படம்.

[தொகு]வெளியிணைப்பு