அக்டோபர் 26, 2011

ஒரு கருத்து






கலைமுகம் 49 வது இதழ் பற்றிய குறிப்பில் தீபச்செல்வன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"அடுத்து கவிதைகள் முக்கியம் கொள்ளுகின்றன. துவாரகனின் கவிதைகள் நம்பிக்கை தகர்ந்த பொழுதுகளை சித்திரிக்கிறது. ‘மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்..’ ‘சாத்தான்களின் உலகம’; ‘நீரின் மட்டம் உயர்கிறது’ முதலிய கவிதைகள் இடம்பெறுகின்றன. கை நழுவிப்போகிற நம்பிக்கையற்ற பொழுதில்

“உடைந்த கூரைகளும்
விழுந்த மரங்களும்
சிதைந்த உடல்களும்
எம் கண் முன்னால்”

என்று இந்தக் காலத்தின் நெருக்கடியை சொல்லுகிறது இந்தக் கவிதைகள். நீரின் மட்டம் உயர்கிறது கவிதை மழை கொட்டிப் பரப்பிய வெள்ளத்தையும் காலம் விழுத்திக்கொண்டிருக்கிற துயர வெள்ளத்தையும் பாய்ச்சுகிறது."
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=346:2009-08-30-10-25-08&catid=4:reviews&Itemid=267