ஏப்ரல் 26, 2026

புயல்நேசனின் 'நஞ்சுமாலை' சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

 



புயல்நேசனின் நஞ்சுமாலைச் சிறுகதைப் பனுவல் வெளியீடு, சட்டத்தரணி சிறில் அமலன் அவர் தலைமையில் சாவகச்சேரி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திரு த. காண்டீபன் அவர் பிரதம விருந்தினராகவும், பிரதம கணக்காளர் திரு சூ. அகிலன் அவர் சிறப்பு விருந்தினராகவும், கலந்து சிறப்பிக்க, 2026.04.25 திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள கலைத்தூது கலையகத்தில் இனிது நடைபெற்றது
மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடனும் இறைவணக்கத்துடனும் நூற்றுக்கணக்கானவர்களின் அகவணக்கத்துடனும் நிகழ்வு ஆரம்பமாகியது. தொடர்ந்து இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திருமதி யேசு ஜெயநேசன் டயானி அவரின் வரவேற்புரை இடம் பெற்றது. சட்டத்தரணியும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் சட்ட ஆலோசகருமான சிறில் அமலன் அவர் ‘புயல் நேசனின் படைப்புத்திறன் பற்றியும் சுயாதீன செயற்பாடுகள் பற்றியும் எமுத்தாளரின் சுதந்திரம் பற்றியும்’ தன்னுடைய கருத்துகளை அழகிய முறையில் முன்வைத்தார். தொடர்ந்து மேடையில் ஆசிரியர் சந்திரன் குமரதாஸ் ஏற்பாட்டில் மாணவியினரின் பாம்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து பிரதம விருந்தினர் வைத்திய அத்தியட்சகர் காண்டீபன் அவர் தன்னுடைய உரையில் ‘எழுத்தினால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் புயல்நேசனின் எழுத்துகளின் ஆழம் பற்றியும்’ பதிவிட்டார். பிரதம கணக்காளர் திரு சூ. அகிலன் அவர் உரையில் ‘புயல்நேசனின் வாழ்க்கை வரலாற்றையும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளன் புயல்நேசனின் வகிபாகம் பற்றியும் பதிவிட்டார். வெளியீட்டுரையை நிழ்த்திய கவிஞர் திருமதி ரஜிதா கமலதாஸ் அவர், ‘நஞ்சுமாலை பனுவல் வருகையின் அவசியத்தை’ வலியுறுத்தினார்.

அடுத்து பிரதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது பிரதிகளை கல்வியலாளர், எழுத்தாளர், அதிபர், இலக்கிய ஆர்வலர் என பலர் பிரதிகளை விருப்பத்துடன் பெற்றனர். தொடர்ந்து முதற் பிரதியைப் பெற்ற பிரபல வரலாற்று ஆசிரியர் மா. பத்மன் அவர் தன்னுடைய உரையில் ‘புயல்நேசனின் பல்கலைக்கழக வாழ்க்கை முதல் தாய்மொழி ஆசிரியர் சங்கம் வரையான செயற்பாடுகளையும்’ முன்வைத்தார். தொடர்ந்து பனுவல் மதிப்பீட்டுரையை கலாநிதி சு. குணேஸ்வரன் அவர் நஞ்சுமாலையின் உருவம் - உள்ளடக்கம் தொடர்பாக தன்னுடைய மதிப்பீட்டுரையை நிகழ்த்தியதுடன், பனுவலில் உள்ள புதிய முயற்சிகளையும் சுட்டிக்காட்டடினார்.’ தொடர்ந்து எழுத்தாளரின் நன்றியுரை கலந்த ஏற்புரையில் ‘சுயதிறனில் விருத்தி’ பற்றிக் குறிப்பிட்டார். இறுதியாக இந்த நிகழ்வுக்கு அறிவிப்பாளராக செயற்பட்ட சட்டபீட மாணவி லோஜிகா அவரின் செவிக்கு இனிமையான பாடலுடன் இனிது அனைத்து நிகழ்வும் நிறைவுபெற்றது.


மார்ச் 01, 2026

சு. குணேஸ்வரனின் ஆய்வுக் கட்டுரைகள்

 


சு. குணேஸ்வரனின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகள்  சிலவற்றை  academia.edu என்ற ஆய்வுத்தளத்தில் PDF கோவையாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கமுடியும். 

இணையத்தளத்திற்கான இணைப்பு கீழே உள்ளது

https://independent.academia.edu/skuneswaran

பிப்ரவரி 25, 2026

பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவத்தின் “ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை”


பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவத்தின் “ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை” - உரை : சு.குணேஸ்வரன்

பொன்னையா விவேகானந்தனின் நான்கு நூல்கள் வெளியீடு


தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவை தாய்வீடு இதழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகம் இணைந்த ஏற்பாட்டில் தமிழ் நாட்டு ஓவிய ஆளுமைகள் மருது மற்றும் ஜீவா ஆகியோரின் சந்திப்பும் சிறப்புரையும் மூத்த ஊடகவியலாளர், விரிவுரையாளர் பொன்னையா விவகானந்தனின் நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வும் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் 18.02.2025 இல் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு 'பெயர்வுத் தமிழ்ச் சமூகம் இருப்பும் இடர்களும்' நூல் பற்றி உரையாற்றியபோது








நவம்பர் 05, 2025

'மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்' நிகழ்வில்

 யா /பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலத்தில் நூலக வாரத்தையொட்டிய (31.10.2025) 'மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்' நிகழ்வில் பங்குபற்றியபோது.


பாடசாலையின் முகநூற்பதிவிலிருந்து....

"யா/வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் 31.10.2025 வெள்ளிக்கிழமை வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்குமுகமாக புத்தகக் கண்காட்சியும் மாணவர்களது சஞ்சிகை ஆக்க வெளியீடும் இடம்பெற்றன.இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு திருப்பரங்கிரிநாதன் செந்தில்நாதன் தலைமையில் இடம்பெற்றது.பிரதம விருந்தினராக கலாநிதி சுப்பிரமணியம் குணேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.இவர் யா/சிதம்பராக் கல்லூரியின் சிறந்த தமிழ் ஆசிரியரும் சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆவார்.இந் நிகழ்வில் பொது அறிவு வினாடிவினா போட்டி, கவிதை,பேச்சு, குறுநாடகம் ,பிரதம விருந்தினருடனான நேர் காணல்,நூலக வார போட்டி நிகழ்வுகளுக்கான பரிசில் வழங்கல் என ஒழுங்கமைக்கப்பட்டி ருந்தன நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி தர்ஷினி மணிக்குமார் நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தார்.அவரின் நன்றிகூறலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.இந்நிகழ்வானது இவ்வருடத்திற்கான வாசிப்பு மாதத் தொனிப் பொருளான மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் என்பதனை மையமாகக் கொண்ட மைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது."