மே 03, 2026

சீத்துவக்கேடு - உரை

காரைக்கவி கந்தையா பத்மானந்தனின் 'சீத்துவக்கேடு - துலைஞ்சுபோன எங்கட வாழ்க்கை' என்ற ஆவணநூல் தொடர்பில் நானும் கணபதி சர்வானந்தா அவர்களும் பைந்தமிழ்ச்சாரலுக்கு நிகழ்த்திய உரை.



உரையின் காணொளி இங்கே



"ஒருபோதும் நான் என் தந்தையின் மகள் இல்லை" நூல் வெளியீடு

 

பாமினி செல்லத்துரை எழுதிய "Never My Father's Daughter" என்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பாகிய "ஒருபோதும் நான் என் தந்தையின் மகள் இல்லை" என்ற நாவல் வெளியீடு 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை யா/ சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா, சிறப்பு விருந்தினராக வல்வை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பாமினி செல்லத்துரையின் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்த கலாநிதி சபா. இராஜேந்திரன் வரவேற்புரையினையும் நூலுக்கான மதிப்பீட்டுரையினை கலாநிதி சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர்.



'தமிழ் இளைஞர்களின் பலமும் பலவீனமும்' என்ற தலைப்பில் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் பாமினி செல்லத்துரையும் நன்றியுரையை சி. ராஜ்குமாரும் நிகழ்த்தினர். பாடசாலைச் சமூகத்தினரும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பாக்கினர்.

நன்றி


ஏப்ரல் 26, 2026

புயல்நேசனின் 'நஞ்சுமாலை' சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

 



புயல்நேசனின் நஞ்சுமாலைச் சிறுகதைப் பனுவல் வெளியீடு, சட்டத்தரணி சிறில் அமலன் அவர் தலைமையில் சாவகச்சேரி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திரு த. காண்டீபன் அவர் பிரதம விருந்தினராகவும், பிரதம கணக்காளர் திரு சூ. அகிலன் அவர் சிறப்பு விருந்தினராகவும், கலந்து சிறப்பிக்க, 2026.04.25 திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள கலைத்தூது கலையகத்தில் இனிது நடைபெற்றது
மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடனும் இறைவணக்கத்துடனும் நூற்றுக்கணக்கானவர்களின் அகவணக்கத்துடனும் நிகழ்வு ஆரம்பமாகியது. தொடர்ந்து இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திருமதி யேசு ஜெயநேசன் டயானி அவரின் வரவேற்புரை இடம் பெற்றது. சட்டத்தரணியும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் சட்ட ஆலோசகருமான சிறில் அமலன் அவர் ‘புயல் நேசனின் படைப்புத்திறன் பற்றியும் சுயாதீன செயற்பாடுகள் பற்றியும் எமுத்தாளரின் சுதந்திரம் பற்றியும்’ தன்னுடைய கருத்துகளை அழகிய முறையில் முன்வைத்தார். தொடர்ந்து மேடையில் ஆசிரியர் சந்திரன் குமரதாஸ் ஏற்பாட்டில் மாணவியினரின் பாம்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து பிரதம விருந்தினர் வைத்திய அத்தியட்சகர் காண்டீபன் அவர் தன்னுடைய உரையில் ‘எழுத்தினால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் புயல்நேசனின் எழுத்துகளின் ஆழம் பற்றியும்’ பதிவிட்டார். பிரதம கணக்காளர் திரு சூ. அகிலன் அவர் உரையில் ‘புயல்நேசனின் வாழ்க்கை வரலாற்றையும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளன் புயல்நேசனின் வகிபாகம் பற்றியும் பதிவிட்டார். வெளியீட்டுரையை நிழ்த்திய கவிஞர் திருமதி ரஜிதா கமலதாஸ் அவர், ‘நஞ்சுமாலை பனுவல் வருகையின் அவசியத்தை’ வலியுறுத்தினார்.

அடுத்து பிரதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது பிரதிகளை கல்வியலாளர், எழுத்தாளர், அதிபர், இலக்கிய ஆர்வலர் என பலர் பிரதிகளை விருப்பத்துடன் பெற்றனர். தொடர்ந்து முதற் பிரதியைப் பெற்ற பிரபல வரலாற்று ஆசிரியர் மா. பத்மன் அவர் தன்னுடைய உரையில் ‘புயல்நேசனின் பல்கலைக்கழக வாழ்க்கை முதல் தாய்மொழி ஆசிரியர் சங்கம் வரையான செயற்பாடுகளையும்’ முன்வைத்தார். தொடர்ந்து பனுவல் மதிப்பீட்டுரையை கலாநிதி சு. குணேஸ்வரன் அவர் நஞ்சுமாலையின் உருவம் - உள்ளடக்கம் தொடர்பாக தன்னுடைய மதிப்பீட்டுரையை நிகழ்த்தியதுடன், பனுவலில் உள்ள புதிய முயற்சிகளையும் சுட்டிக்காட்டடினார்.’ தொடர்ந்து எழுத்தாளரின் நன்றியுரை கலந்த ஏற்புரையில் ‘சுயதிறனில் விருத்தி’ பற்றிக் குறிப்பிட்டார். இறுதியாக இந்த நிகழ்வுக்கு அறிவிப்பாளராக செயற்பட்ட சட்டபீட மாணவி லோஜிகா அவரின் செவிக்கு இனிமையான பாடலுடன் இனிது அனைத்து நிகழ்வும் நிறைவுபெற்றது.


மார்ச் 01, 2026

சு. குணேஸ்வரனின் ஆய்வுக் கட்டுரைகள்

 


சு. குணேஸ்வரனின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகள்  சிலவற்றை  academia.edu என்ற ஆய்வுத்தளத்தில் PDF கோவையாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கமுடியும். 

இணையத்தளத்திற்கான இணைப்பு கீழே உள்ளது

https://independent.academia.edu/skuneswaran