டிசம்பர் 23, 2019

நீள்கரைப் பயணம் - 1



(19.12.2019)

மறுபாதி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கியப் பயணமாக அமைந்த "நீள்கரைப் பயணத்தில்" சங்குப்பிட்டி, குடமுருட்டிப்பாலம், கிளிநொச்சி,.பேராவில்,புதுக்குடியிருப்பு காட்டு அந்தோணியார் கோயில் ஆகிய இடங்களில் நண்பர் இணைந்து இலக்கியம் தொடர்பான உரையாடலில் ஈடுபட்டோம்.

இந்தப் பயணத்தில் சித்தாந்தன், தானாவிஷ்ணு, சி. ரமேஸ், குணேஸ்வரன், மயூரரூபன், யாத்திரிகன், இ.சு முரளிதரன் ஆகியோர் இணைந்து கொண்டோம். கிளிநொச்சியில் கருணாகரனும் நண்பர்களும் இணைந்து கொண்டார்கள்.

தொகுப்புக்களின் அரசியல், கவிதை வாசித்தல், வாசிக்கப்பட்ட கவிதைகள் தொடர்பாக உரையாடுதலும் அதனுடன் இணைந்த கவிதைகள் பற்றிய கருத்துக்களும், இலக்கியச் செயற்பாடுகளின் தேக்க நிலை, அடையாள இழப்பு, சமூகத்தின் பலதரப்பிலும் பல துறைகளிலும் மேலோங்கியிருக்கும் புறக்கணிப்பு நிலை, சோபாசக்தியின் புதிய நாவலான இச்சா பற்றிய விமர்சனம் முதலானவை இந்தப் பயணத்தில் பேசுபொருட்களாக அமைந்திருந்தன.

ஆரம்ப உரை சி.ரமேஸ்
https://www.facebook.com/sabapathys/videos/10219651621791380/

துவாரகனின் கவிதை வாசிப்பு :
https://www.facebook.com/sabapathys/videos/pcb.10219654156454745/10219653440916857/?type=3&theater

இ.சு முரளிதரனின் கவிதை வாசிப்பு :
https://www.facebook.com/sabapathys/videos/10219656980045333/

தானாவிஷ்ணுவின் கவிதை வாசிப்பு :
https://www.facebook.com/sabapathys/videos/10219654829471570/

கருணாகரன் உரை:
https://www.facebook.com/thanavishnu.thambithurai/videos/pcb.3385870778120901/3385826268125352/?type=3&theater

ஷோபாசக்தியின் இச்சா பற்றி :
https://www.facebook.com/sabapathys/videos/10219655150359592/



உரையாடல்களின் சில காணொளிகள் சித்தாந்தனின் முகநூல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளன. விரிவான கட்டுரைகளை நண்பர்கள் எழுதுவார்கள் என எண்ணுகிறேன்.

நண்பர்களுடனான இந்தப் பயணம் மிக இனிமையானதாகவும் இலக்கியச் செயற்பாட்டில் மேலும் ஈடுபாட்டுடன் செயற்பட ஊக்கம் தருவதாகவும் அமைந்தது. நீள்கரைப் பயணத்தின் 2ஆவது தொடரை வரும் ஜனவரி 2ஆந் திகதி மேற்கொள்ளவிருப்பதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

(பதிவு : சு.குணேஸ்வரன், படங்கள் : நீள்கரைப் பயண நண்பர்கள்)































நவம்பர் 03, 2019

“சூழலைத் தூய்மையாக்குவோம்” விழிப்புணர்வுச் செயற்றிட்டம் -1



   கெருடாவில் வாலிபர் சங்கம் (Viber group) ஏற்பாட்டில் 03.11.2019 ஞாயிறு மாலை 3.30 மணியளவில் சூழலைத் தூய்மையாக்குவோம் என்ற விழிப்புணர்வுச் செயற்றிட்டம் -1 இடம்பெற்றது. திட்டமிட்டவாறு தொண்டைமானாறு சந்தியில் அமைந்துள்ள கோணேசர் கோவில் குளம் மற்றும் பெரியகடற்கரை சந்தைப் பகுதியை அண்டிய கடற்கரைப் பிரதேசமும் இச்செயற்பாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.  அங்கிருந்த பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருட்கள் அகற்றப்பட்டன.

   இளைஞர்களை சமூகச் செயற்பாட்டாளர்களாக ஆக்கும்  இச்செயற்பாட்டுக்கு எதிர்பார்த்த இளைஞர்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தமை ஏமாற்றத்தைத் தந்தபோதும், சிறிய அளவிலான இச்செயற்பாட்டிற்கு பங்கெடுத்தவர்களின் செயற்பாடு எமக்கு திருப்தியளிக்கக்கூடியதாக அமைந்தது. இந்த முயற்சிக்கு வல்வை நகரசபையினரின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் கிடைத்தது கூடுதல் பலமாக அமைந்தது. இம்முயற்சியில் வல்வை நகரசபைத் தவிசாளர், ஊழியர்கள் மற்றும் நகரசவை உறுப்பினர் கமல் ஆகியோரும் பங்கெடுத்தனர்.

  பங்கெடுத்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு “சூழலைத் தூய்மையாக்குவோம்” விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் 2 ஆவது செயற்பாட்டுக்கு அதிக இளைஞர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

ஒருங்கிணைப்பு : சு.குணேஸ்வரன்
படங்கள் : கம்சிகன்