ஜூலை 13, 2012
ஜூன் 24, 2012
ஜூன் 23, 2012
ஜூன் 15, 2012
நன்றி இலக்கியக் குவியம்
துவாரகன்
துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு. குணேஸ்வரன் (S. Kuneswaran) ஈழத்துக் கவிஞராக, விமரிசகராக, புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக அறிமுகமானவர்.
துவாரகன், ஆரம்பக் கல்வியைக் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தொண்...டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க. பொ. த. உயர்தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். பெற்றோர் சுப்பிரமணியம், கமலாதேவி.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் பெற்றார். '20ஆம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனைகதைகள்' என்ற ஆய்வுக்காக பேராசிரியர் அ. சண்முகதாசின் நெறியாள்கையில் 2006இல் முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
தற்போது யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.
கவிதைகளுடன் விமரிசனத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவரின் கவிதைகள் உயிர்நிழல், வார்ப்பு, பதிவுகள், திண்ணை, அதிகாலை.கொம், காற்றுவெளி, தமிழ் ஓதர்ஸ் மற்றும் பல இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.
ஈழத்து இதழ்களான மல்லிகை, கலைமுகம், ஞானம், புதியதரிசனம், வெளிச்சம், தாயகம், செங்கதிர் மற்றும் புலம்பெயர் இதழ்களான உயிர்நிழல், எதுவரை போன்றவற்றிலும் தமிழகத்திலிருந்து வெளிவரும் யுகமாயினி, உயிர்மை ஆகியவற்றிலும் வீரகேசரி, தினகரன், நமது ஈழநாடு, உதயன், வலம்புரி, தினக்குரல், சுடர் ஒளி ஆகியவற்றிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.
இவரது நூல்கள்.
மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் - கவிதைத் தொகுப்பு, வெளியீடு: தினைப்புனம், யாழ்ப்பாணம், 2008
அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை (கட்டுரைகள்), வெளியீடு:- தினைப்புனம், முதற்பதிப்பு 2009
இவரது கவிதையொன்று.
சபிக்கப்பட்ட உலகு.
மீளவும் பூச்சிகளும் பறவைகளும்
வாழும் உலகு எனக்காகச்
சபிக்கப்பட்டிருக்கிறது
எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்
ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்
வழமையாயிற்று
எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?
அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்
மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?
சீறிவரும் வாகனத்தில் இருந்து
கண்ணாடிக் கதவு இறக்கி
சுட்டுவிரல் காட்டவும்
லாபத்தில் பங்குபோடவும்
நேரம் குறித்து வருவார்கள்.
கூடவே முதுகு சொறிய
கொஞ்சம் ஒட்டியிருக்கும்.
பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே
வாழக்கூடிய வனவாசகத்தில்
பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்
என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்
மூன்று மணித்தியாலமாக
யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக
பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்
வீதியை வெறிப்பதும்
குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்
பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று
மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்
மண்புழுக்கள் நெளிவதையும்
வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட
என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு
ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது
*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்புSee more
— with Thevarasa Mukunthan and 7 others.துவாரகன் என்ற புனைபெயர் கொண்ட சு. குணேஸ்வரன் (S. Kuneswaran) ஈழத்துக் கவிஞராக, விமரிசகராக, புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக அறிமுகமானவர்.
துவாரகன், ஆரம்பக் கல்வியைக் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை தொண்...டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் க. பொ. த. உயர்தரத்தை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பயின்றார். பெற்றோர் சுப்பிரமணியம், கமலாதேவி.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் (தமிழ் சிறப்பு) பட்டத்தைப் பெற்றார். '20ஆம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை, புனைகதைகள்' என்ற ஆய்வுக்காக பேராசிரியர் அ. சண்முகதாசின் நெறியாள்கையில் 2006இல் முதுதத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
தற்போது யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.
கவிதைகளுடன் விமரிசனத்திலும் ஈடுபாடு கொண்டவர். இவரின் கவிதைகள் உயிர்நிழல், வார்ப்பு, பதிவுகள், திண்ணை, அதிகாலை.கொம், காற்றுவெளி, தமிழ் ஓதர்ஸ் மற்றும் பல இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.
ஈழத்து இதழ்களான மல்லிகை, கலைமுகம், ஞானம், புதியதரிசனம், வெளிச்சம், தாயகம், செங்கதிர் மற்றும் புலம்பெயர் இதழ்களான உயிர்நிழல், எதுவரை போன்றவற்றிலும் தமிழகத்திலிருந்து வெளிவரும் யுகமாயினி, உயிர்மை ஆகியவற்றிலும் வீரகேசரி, தினகரன், நமது ஈழநாடு, உதயன், வலம்புரி, தினக்குரல், சுடர் ஒளி ஆகியவற்றிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.
இவரது நூல்கள்.
மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் - கவிதைத் தொகுப்பு, வெளியீடு: தினைப்புனம், யாழ்ப்பாணம், 2008
அலைவும் உலைவும், புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வை (கட்டுரைகள்), வெளியீடு:- தினைப்புனம், முதற்பதிப்பு 2009
இவரது கவிதையொன்று.
சபிக்கப்பட்ட உலகு.
மீளவும் பூச்சிகளும் பறவைகளும்
வாழும் உலகு எனக்காகச்
சபிக்கப்பட்டிருக்கிறது
எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்
ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்
வழமையாயிற்று
எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?
அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்
மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?
சீறிவரும் வாகனத்தில் இருந்து
கண்ணாடிக் கதவு இறக்கி
சுட்டுவிரல் காட்டவும்
லாபத்தில் பங்குபோடவும்
நேரம் குறித்து வருவார்கள்.
கூடவே முதுகு சொறிய
கொஞ்சம் ஒட்டியிருக்கும்.
பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே
வாழக்கூடிய வனவாசகத்தில்
பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்
என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்
மூன்று மணித்தியாலமாக
யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக
பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்
வீதியை வெறிப்பதும்
குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்
பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று
மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்
மண்புழுக்கள் நெளிவதையும்
வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட
என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு
ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது
*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்புSee more
· · Share
யாழ் இலக்கிய குவியம்ஒரு கவிதை உருவாகும் கணங்கள் மிக முக்கியமானவை என்று எண்ணுகிறேன். எமக்கு முன்னால் ஒவ்வொரு கணங்களிலும் பல நிகழ்வுகள் நிகழ்ந்தேறி வருகின்றன. எரிநெருப்பு எம்மைச் சுடுவதும், ஒரு இனிய இசை எம்மைக் கொள்ளை கொள்வதும் மாறாக எரிநெருப்பே விருப்புக்குர...ியதாக மாறுவதும், இனிய இசை எம்மை வருத்துவதும் திரும்பவும் திரும்பவும் நிகழ்ந்தேறி வருகின்றன. இவற்றில் எல்லாம் கவிதையாவதுமில்லை. சில சமயங்களில் பஸ் யன்னலூடாகப் பயணிக்கும் குழந்தையொன்று முகம் தெரியாத எம்மைப் பார்த்து கையசைப்பது போல் கவிதை எமக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிடும் ---- நேர்காணல் ஒன்றில் கவிதை பற்றி துவாரகன் .See more
Yesterday at 16:28 · · 4
ஏப்ரல் 28, 2012
கா. சூரன்
தமிழ் விக்கிபீடியாவில் எனது பங்களிப்பு வரிசையில்....சைவப்பெரியார் கா. சூரன்
http://tawp.in/r/35n3கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைவப்பெரியார் கா. சூரன் (ஆகத்து 1, 1881 - 1956) இலங்கையின் வடக்கே வடமராட்சியில் அமைந்துள்ள தேவரையாளி சைவ வித்தியாசாலையின் நிறுவனராகவும் முதல்வராகவும் இருந்தவர். இவர் ஒரு சமூக முன்னோடியுமாவார். பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவர். முற்போக்கு எண்ணம் கொண்டவர்.
பொருளடக்கம் [மறை]
1 வாழ்க்கைச் சுருக்கம்
2 சமூகப்பணிகள்
3 தொடர்பான பதிவுகள்
3.1 சைவப்புலவர் சூரன் எழுதியவை
3.2 ஏனையவர்கள் எழுதியவை
4 நினைவுச்சின்னம்
5 மேற்கோள்கள்
6 வெளியிணைப்புக்கள்
[தொகு]வாழ்க்கைச் சுருக்கம்
1881 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கரவெட்டியில் பிறந்தார். தந்தையார் வே. காத்தார், தாயார் வள்ளி ஆகியோருக்கு மூத்த புதல்வனாகப் பிறந்தார். கரவெட்டியில் இருந்த உவெசுலியன் மிசன் கிறித்தவப் பாடசாலையில் 5 ஆம் வகுப்புவரை கல்வி கற்றார். 1917 இல் வதிரியில் மாணிக்கம் என்பவரை மணஞ் செய்தார். பிள்ளைகள் மகள் சிவபாக்கியம், மகன் ஏகாம்பரம்.
[தொகு]சமூகப்பணிகள்
தேவரையாளி சைவவித்தியாசாலையின் நிறுவனர். தேவரையாளி ஆரம்பப் பாடசாலையை வதிரி ‘வண்ணஞ்சீமா’ என்ற காணியில் சிறு கொட்டிலில் தொடக்கி பின்னர் 1917 இல் தற்போது அமைந்திருக்கும் இடத்தில் பிரவேசம் செய்வித்தார். 1919 இல் பாடசாலை பதிவு செய்யப்பட்டது.
1923 ஆம் ஆண்டில் வதிரியில் அண்ணமார் கோவிலில் நடைபெற்ற ஆடு பலியிடுதலை சைவப்பெரியார் சூரன் பலிபீடத்தில் தன் தலையை வைத்து ஆட்டை வெட்டுவதற்க்கு முன்னர் தன் தலையை வெட்டுங்கள் எனக் குரல் கொடுத்து அந்த ஊரில் பலியிடுதலை நிறுத்திவைத்தார்[1]. அதன் பின்னர் அந்த அண்ணமார் கோவில் பிள்ளையார் கோவிலாக மாறியது. இந்த நிகழ்வுகள் பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி பல இடங்களில் எழுதியிருக்கிறார்.
[தொகு]தொடர்பான பதிவுகள்
[தொகு]சைவப்புலவர் சூரன் எழுதியவை
பராசக்தி படவிமர்சனம் – சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரமானது. இது எட்டுப்பக்கங்களைக் கொண்ட சிறிய பிரசுரமாகவும் 1953 இல் 15 சத விலையில் வெளிவந்தது. பராசக்தி படவிமர்சனம் என்ற பெயரில் அமரர் வல்லிபுரம் கந்தசாமி நினைவு வெளியீடாக 10.03.2004 இல் மீளவும் வெளியிடப்பட்டது.
மகாத்மா காந்தி மறைந்தபோது அவர் மீது பல இரங்கற்பாடல்களை எழுதியவர்.
சூரன் சுயசரிதை (பதிப்பாசிரியர்: ராஜ சிறீகாந்தன், 2004, பக்கம் 148.
[தொகு]ஏனையவர்கள் எழுதியவை
சூரனின் நினைவுதினத்தில் வெளியிடப்பட்ட ‘கல்வெட்டு’
கல்கி "இலங்கையில் ஒரு வாரம்" என்ற கட்டுரையின் 8 ஆம் அத்தியாயத்தில் சைவப்பெரியார் சூரன் பற்றியும் அப்போது இலங்கையில் நிலவிய தீண்டாமை பற்றியும் 08.09.1950 இல் வெளிவந்த கல்கி இதழில் எழுதியுள்ளார்.
[தொகு]நினைவுச்சின்னம்
சைவப்பெரியார் சூரன் சிலை தேவரையாளி இந்துக்கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வுருவச் சிலைக்கு 06.02.2004 இல் அப்போதைய அதிபர், மா. குட்டித்தம்பி அடிக்கல் நாட்டினார். வடமராட்சி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்த வி. அருளானந்தம் 14.06.2004 இல் சூரன்சிலையை திறந்து வைத்தார்.
[தொகு]மேற்கோள்கள்
↑ வதிரி பூவற்கரையான்
[தொகு]வெளியிணைப்புக்கள்
நூலகம் திட்டத்தில் சூரன் சுயசரிதை
சூரன் எழுதிய பராசக்தி படவிமர்சனம்
பகுப்புகள்: 1881 பிறப்புகள்1956 இறப்புகள்இலங்கையின் சைவப்பெரியார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)